|
|
தாசிப் பெண் (ஜோதிமலர், தும்பை மகாத்மியம்) ![]() நடிப்பு
டி.ஆர்.மகாலிங்கம், எம்.ஜி.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, புளிமூட்டை ராமசாமி, ஆர்.பாலசரஸ்வதி, எம்.ஆர்.சந்தானலட்சுமி, டி.ஏ.மதுரம்கதை
பம்மல் சம்பந்த முதலியார்படத்தொகுப்பு
ஆர்.எஸ்.மணிஇசை
லலிதா வெங்கட்ராமன், எஸ்.ராஜேஸ்வர ராவ்இயக்கம்
எல்லிஸ் ஆர். டங்கன்தயாரிப்பு நிறுவனம்
மினர்வா மூவிடோன், நியூடோன் ஸ்டூடியோ, புவனேஸ்வரி பிக்சர்ஸ்வெளியீடு
3 மார்ச் 1943தாசிப்பெண், ஜோதிமலர் அல்லது தும்பை மகாத்மியம் என்ற மூன்று பெயர்களில் 1943 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த தமிழ்த் திரைப்படத்தை எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கியிருந்தார். இதில் டி.ஆர்.மகாலிங்கம், எம்.ஜி.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, புளிமூட்டை ராமசாமி, பாலசரஸ்வதி, எம்.ஆர்.சந்தானலட்சுமி, டி.ஏ.மதுரம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். புவனேஸ்வரிப் பிச்சர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு லலிதா வெங்கட்ராமன், எஸ். ராஜேஸ்வர ராவ் ஆகியோர் இசையமைத்திருந்தனர். அதே நேரத்தில் ஏற்கெனவே வேறொருவருடன் திருமணமான தேவதாசியின் சகோதரி (டி.ஏ.மதுரம்) புடவை விற்க வரும் வியாபாரி (என்.எஸ்.கிருஷ்ணன்) மீது காதல் கொள்கிறாள். இந்த கள்ளக்காதலை ஒவ்வொரு தடவையும் பயங்கர தோற்றமுடையவர் (புளிமூட்டை ராமசாமி) தடுக்கிறார். தேவதாசி தன்னுடைய வாழ்வில் வெறுப்படைகிறாள். அவளின் பிரார்த்தனையை ஏற்று சிவபெருமான் அவளை தும்பைப் பூவாக மாற்றுகிறார். இன்றும் சிவபெருமானுக்கு தும்பைப் பூ அர்ச்சிக்கப்படுகிறது. அதனால் இப்படத்திற்கு தும்பை மகாத்மியம் என பெயர் வந்தது. இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட பிலிம் தட்டுப்பாட்டின் காரணமாக இப்படம் 13,623 அடி நீலம் மட்டுமே உடைய குறும் படமாகத்தான் வெளியானது. |