ரோசாப்பூ ரவிக்கைக்காரி

rosappu ravikkaikari
நடிப்பு
சிவக்குமார், தீபா, சிவச்சந்திரன், வினு சக்கரவர்த்தி

பாடல்கள்
புலமைப்பித்தன், கங்கை அமரன்

இசை
இளையராஜா

ஒளிப்பதிவு
ஆர்.என்.கே. பிரசாத்

படத்தொகுப்பு
டி.பி. சேகர்

இயக்கம்
தேவராஜ் & மோகன்

தயாரிப்பு
திருப்பூர் மணி

தயாரிப்பு நிறுவனம்
விவேகானந்தா பிக்சர்ஸ்

வெளீயீடு:
18, மே 1979

ரோசாப்பூ ரவிக்கைக்காரி நடிகர் சிவக்குமார் அவர்களின் 100வது படமாகும். இப்படத்தை விவேகானந்தா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இரட்டை இயக்குநர்களான தேவராஜ் மற்றும் மோகன் இயக்கத்தில் உருவான இப்படத்தை தயாரித்தவர் திருப்பூர் மணி.

இப்படம் ‘பரசங்கட கெண்டதிம்மா’ என்ற கன்னட படத்தின் தழுவல் ஆகும். அந்த கன்னட படம் கன்னட எழுத்தாளர் ஸ்ரீகிருஷ்ண அலனஹள்ளி எழுதிய ‘பரசங்கட கெண்டதிம்மா' நூலின் திரைவடிவமாகும்.

இப்படத்தில் தான் வினு சக்கரவர்த்தி அறிமுகம் ஆனார்.

இப்படத்தின்பாடல்களை புலமைப்பித்தனும், கங்கை அமரனும் எழுதியுள்ளார்கள். இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் வரும் ‘மாமன் ஒரு நாள்’ என்ற பாடல் ஹரிகாம்போஜி ராகத்திலும், ‘என்னுள்ளே எங்கோ’ என்ற பாடல் மதுவந்தி ராகத்திலும் அமைந்துள்ளன.

வீடியோ


*****
பாடல்கள்
1. உச்சி வகுந்தெடுத்து
படம் : ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.பி. சைலஜா
இசை : இளையராஜா
இயற்றியவர் : புலமைப்பித்தன்

வீடியோ


உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க
மேயுதுன்னு சொன்னதுல ஞாயம் என்ன கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க
மேயுதுன்னு சொன்னதுல ஞாயம் என்ன கண்ணாத்தா

ஏ ஆரிராரோ.. ஆரிராரோ...
ஆரிராரிராரோ ஆரிராரோ... ஆரிராரோ..
ஆரிராரோ... ஆரிராரோ.. ஆரிராரோ...

பட்டியில மாடுகட்டி பால கறந்துவச்சா
பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க
சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல
அடி சின்னக் கண்ணு நானும் அத ஒத்துக்கல

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க

வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொச்சுதுன்னு சொன்னாங்க
கட்டுக் கதை அத்தனையும் கட்டுக் கதை
அதை சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க

நானனனா நானனனாநனனா ஹேய்ய். ஹேய்...
நான ஹேய்...
நானனனா நானனனானா ஹேய்...

பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்பு
செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க
செங்கரையான் தின்னிருக்க நியாயமில்ல
அடி சித்தகத்தி பூவிழியே நம்பவில்ல

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க
மேயுதுன்னு சொன்னதுல ஞாயம் என்ன கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க
மேயுதுன்னு சொன்னதுல ஞாயம் என்ன கண்ணாத்தா

*****
2. என் உள்ளில் எங்கோ
படம் : ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
பாடியவர் : வாணி ஜெயராம்
இசை : இளையராஜா
இயற்றியவர் : கங்கை அமரன்

வீடியோ


என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது

உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா...

ஏன் நிறுத்திட்டீங்க...

இங்க ஒரு அழகான இடமிருக்கு...
உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா...

என் மன கங்கையில் சங்கமிக்க
சங்கமிக்க பங்கு வைக்க
பொங்கிடும் பூம்புனலில்…
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பொங்கிடும் அன்பெனும் பூம்புனலில்
போதையிலே மனம் பொங்கி நிற்க
தங்கி நிற்க காலம் இன்றே சேராதோ

என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது

மஞ்சளை பூசிய மேகங்களே
மேகங்களே மோகங்களே
மல்லிகை மாலைகளே…
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மல்லிகை முல்லையின் மாலைகளே
மார்கழி மாதத்து காலைகளே சோலைகளே
என்றும் என்னை கூடாயோ

என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்

*****
3. மாமன் ஒரு நாள்
படம் : ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
பாடியவர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் | எஸ். பி. சைலஜா
இசை : இளையராஜா
இயற்றியவர் : கங்கை அமரன்

வீடியோ


பெண்: ஏ ஏ ஏ ஏ ஏ ஏ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ

பெண்: மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்
என் மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்

அடி ஆத்தி இது எதுக்கு
நான் யோசனப் பண்ணி
பார்த்தேனம்மா
அவன் வாங்கிக்கச்
சொல்லித் தந்தானம்மா

ஆண்: மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்

பெண்: என் மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்

ஆண்: அடி ஆத்தி இது எதுக்கு
நான் யோசனப் பண்ணி
பார்த்தேனம்மா
அவன் வாங்கிக்கச்
சொல்லித் தந்தானம்மா

பெண்: என்னத்தச் சொன்னான்
ஏது சொன்னான்
சின்னபுள்ள நான்
பச்சை புள்ளை நான்
வாசத்திலே மதி மறந்து
வாங்கிகிட்டேன் நான்
வச்சிக்கிட்டேன் நான்

ஆண்: மல்லியப்பூ வாசம்
என் மாமன் மேல வீசும்
மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்

ஆண்: மாங்கா தோப்போரம்
நான் மறுநா போனேனாம்
தேங்கா பூவாட்டம்
நான் சிரிச்சிக் கிட்டிருந்தேனாம்
அடி ஆத்தாடி என்னோரமா
என் மாமன் வந்தான் அங்கே

பெண்: ஏ ஏ ஏ ஏ

ஆண்: என் மாமன் வந்தான் அங்கே
ஒரு மாங்கா தந்தான் திங்க

பெண்: என்னத்தப் பண்ணான்
ஏதுப் பண்ணான்
சின்னப் பொண்ணு நான்
பச்சப் பொண்ணு நான்
ஆசையில என்னை மறந்து
வாங்கிட்டேன் நான்
தின்னுபுட்டேன் நான்

ஆண்: மாமன் தந்த மாங்கா
நல்ல மல்கோவாதாங்க
மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்

ஆண்: கம்மா கரையோரம்
நான் குளிச்சிக் கிட்டிருந்தேனாம்
சேலை துணி எல்லாம்
நான் தொவைச்சிக் கிட்டிருந்தேனாம்

அடி அம்மாடி என்னோரமா
என் மாமன் தானே வந்தான்
புது சேலை தானே தந்தான்

பெண்: என்னத்தப் பண்ணான்
ஏதுப் பண்ணான்
சின்னப் பொண்ணு நான்
பச்சப் பொண்ணு நான்
சேலையிலே என்ன மறந்து
வாங்கிக்கிட்டேன் நான்
கட்டிக்கிட்டேன் நான்

ஆண்: மாமன் தந்த சேலை
அந்த மல்லியப்பூ போல

பெண்: மாமன் ஒரு நா
மல்லியப்பூ கொடுத்தான்

ஆண்: ஒரு நா தனியா தான்
நான் வீட்டில இருந்தேனாம்
மெதுவா வந்தானாம்
நான் வரவா என்றானாம்

அடி ஆத்தாடி என்னோரமா

பெண்: புது பாய போட்டான்
அங்கே புது விதமா பாத்தான் இங்கே

ஆண்: என்னத்தப் பண்ணான்
ஏதுப் பண்ணான்
சின்னப் பொண்ணு நான்
பச்சப் பொண்ணு நான்
ஒண்ணுமறியா
கன்னி பொண்ணு நான்
மதி மயங்கி
படுத்துக்கிட்டேன்

குழு: ஹஹஹஹஹா