சிங்கார வேலன்

singaravelan
நடிப்பு
கமல்ஹாசன், குஷ்பூ, ஜெய்சங்கர், மனோரமா, கவுண்டமணி, வடிவேலு, சுமித்ரா, விஜயகுமார், சார்லி, மனோ, வி. கே. ராமசாமி, வெண்ணிற ஆடை மூர்த்தி, வினு சக்ரவர்த்தி, நிழல்கள் ரவி, மலேசியா வாசுதேவன், சி. ஆர். சரஸ்வதி

இசை
இளையராஜா

ஒளிப்பதிவு
அப்துல் ரகுமான்

படத்தொகுப்பு
பி. லெனின், வி.டி. விஜயன்

கதை
பஞ்சு அருணாசலம்

இயக்கம்
ஆர்.வி. உதயகுமார்

தயாரிப்பு
ஆர்.டி. பாஸ்கர்

தயாரிப்பு நிறுவனம்
பாவலர் கிரியேஷன்ஸ்

வெளீயீடு:
13 ஏப்ரல் 1992

வீடியோ


*****
பாடல்கள்
1. இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்
படம் : சிங்கார வேலன் (1992)
பாடியவர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
இசை : இளையராஜா
இயற்றியவர் : ஆர்.வி. உதயகுமார்

வீடியோ


இன்னும் என்னை
என்ன செய்யப் போகிறாய்
அன்பே அன்பே...

என்னைக் கண்டால் என்னென்னவோ
ஆகிறாய் முன்பே முன்பே

கைகள் தானாய் கோர்த்தாய்
கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்
இன்பம் இன்பம் சிருங்கார லீலா

இன்னும் என்னை
என்ன செய்ய போகிறாய்
அன்பே அன்பே...

என்னை கண்டால் என்னென்னவோ
ஆகிறாய் முன்பே முன்பே

பாடி வரும் வான் மதியே
பார்வைகளின் பூம்பனியே
தேவ சுகத் தேன் கனியே
மோக பரிபூரணியே

பூவோடு தான் சேர
இளங்காற்று போராடும் போது
சேராமல் தீராது
இடம் பார்த்து
தீர்மானம் போடு
புது புது விடுகதை
தொடத் தொடத் தொடர்கிறதே...

இன்னும் என்னை
என்ன செய்ய போகிறாய்
அன்பே அன்பே...

என்னை கண்டால் என்னென்னவோ
ஆகிறாய் முன்பே முன்பே...

உன்னைச் சேர்ந்தாள் பாவை
இன்னும் அங்கு ஏதோ தேவை
சொல்லு சொல்லு சிங்கார வேலா...

தேன் கவிதை தூது விடும்
நாயகனே மாயவனே
நூலிடையை ஏங்க விடும்
வான் அமுத சாகரனே

நீதானே நான் பாடும்
சுகமான ஆகாசவாணி
பாடாமல் கூடாமல்
உறங்காது ரீங்காரத் தேனீ

தடைகளை கடந்து நீ
மடைகளை திறந்திட வா...

இன்னும் என்னை
என்ன செய்ய போகிறாய்
அன்பே அன்பே...

ஆஹா!
என்னை கண்டால் என்னென்னவோ
ஆகிறாய் முன்பே முன்பே

கைகள் தானாய் கோர்த்தாய்
கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்

சொல்லு சொல்லு சிங்கார வேலா

இன்னும் என்னை
என்ன செய்ய போகிறாய்
அன்பே அன்பே...

என்னை கண்டால் என்னென்னவோ
ஆகிறாய் முன்பே முன்பே... அன்பே...