பம்பாய்

bombay
நடிப்பு
அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா, நாசர், கிட்டி, டினு ஆனந்த், ஆகாஷ் குரானா, சோனாலி பிந்த்ரே, பிரகாஷ் ராஜ்

பாடல்கள்
வைரமுத்து

இசை
ஏ.ஆர். ரஹ்மான்

கலை
தோட்டா தரணி

ஒளிப்பதிவு
ராஜீவ் மேனன்

படத்தொகுப்பு
சுரேஷ் அரஸ்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
மணிரத்னம்

தயாரிப்பு
எஸ். ஸ்ரீராம்

தயாரிப்பு நிறுவனம்
ஆலயம்

வெளீயீடு:
10 மார்ச் 1995

வீடியோ


*****

பாடல்கள்
1. கண்ணாளனே
படம் : பம்பாய் (1995)
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர் : சித்ரா

வீடியோ


குமுசுமு குமுசுமு கும் பு சுப்
குமுசுமு கும் பு சுப்
குமுசுமு குமுசுமு கும் பு சுப்
குமுசுமு கும் பு சுப்

சலசல சலசல சோலைக் கிளியே
ஜோடியைத் தேடிக்க
சிலுசிலு சிலுசிலு சக்கரை நிலவே
மாலையை மாத்திக்க

மாமன் காரன் ராத்திரி வந்தா
மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம்
மனசுல வச்சிக்க

மாமன் காரன் ராத்திரி வந்தா
மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம்
மனசுல வச்சிக்க

கண்ணாளனே எனது கண்ணை
நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக் கொண்டும்
ஏன் இன்னும் பேசவில்லை

ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ

வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

கண்ணாளனே எனது கண்ணை
நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டும்
ஏன் இன்னும் பேசவில்லை

ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ

வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

கமபப ஆஆஆ ஆஆஆ கமபபரீ
நிதனிப நிதனிப பப த
கமபப நிபபப பமரீ கம கம கம
நி சா சா சா நி சா சா சா
நி சா நி சா நி சா
நிச நிச நிச நிச நிச நிச
நிசனித பபமா
சகமபகம நிதப ஆஆஆ

உந்தன் கண் ஜாடை விழுந்ததில்
நெஞ்சம் நெஞ்சம்
தறிக்கெட்டுத் தளும்புது நெஞ்சம்

எந்தன் நூலாடை பறந்ததில்
கொஞ்சம் கொஞ்சம்
பிறை முகம் பார்த்தது கொஞ்சம்

ரத்தம் கொதி கொதிக்கும்
உலை கொதித்திடும் நீர்க்குமிழ் போல
சித்தம் துடி துடிக்கும்
புயல் எதிர்த்திடும் ஓர் இலைப் போல

பனித்துளிதான் என்ன செய்யுமோ
மூங்கில் காட்டில் தீ விழும்பொழுது
மூங்கில் காடென்று ஆயினள் மாது

கண்ணாளனே எனது கண்ணை
நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டும்
ஏன் இன்னும் பேசவில்லை

ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ

வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

குமுசுமு குமுசுமு கும் பு சுப்
குமுசுமு கும் பு சுப்
குமுசுமு குமுசுமு கும் பு சுப்
குமுசுமு கும் பு சுப்

சலசல சலசல சோலைக் கிளியே
ஜோடியைத் தேடிக்க
சிலுசிலு சிலுசிலு சக்கரை நிலவே
மாலையை மாத்திக்க

மாமன் காரன் ராத்திரி வந்தா
மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம்
மனசுல வச்சிக்க

மாமன் காரன் ராத்திரி வந்தா
மடியில கட்டிக்க
மாமன் தந்த சங்கதி எல்லாம்
மனசுல வச்சிக்க

ஒரு மின்சாரம் பார்வையின் வேகம்
வேகம் உன்னோடு நான் கண்டுகொண்டேன்
ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம்
தாபம் என்னோடு நான் கண்டுகொண்டேன்

என்னை மறந்துவிட்டேன்
இந்த உலகத்தில் நானில்லை நானில்லை
உன்னை இழந்துவிட்டால்
எந்த மலரிலும் தேனில்லை தேனில்லை

இது கனவா இல்லை நனவா
என்னைக் கிள்ளி உண்மை தெளிந்தேன்
உன்னைப் பார்தெந்தன்
தாய்மொழி மறந்தேன்

கண்ணாளனே எனது கண்ணை
நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டும்
ஏன் இன்னும் பேசவில்லை

ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ

வாய் பேசவே வாய்ப்பில்லையே
வலி தீர வழி என்னவோ

கண்ணாளனே எனது கண்ணை
நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டும்
ஏன் இன்னும் பேசவில்லை
கண்ணாளனே...

*****
2. உயிரே உயிரே
படம் : பம்பாய் (1995)
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர் : ஹாிஹரன், கே.எஸ்.சித்ரா

வீடியோ


ஆண் : உயிரே உயிரே
வந்து என்னோடு கலந்து விடு
உயிரே உயிரே
என்னை உன்னோடு கலந்து விடு
நினைவே நினைவே
எந்தன் நெஞ்சோடு கலந்து விடு
நிலவே நிலவே
இந்த விண்ணோடு கலந்து விடு
காதல் இருந்தால்
எந்தன் கண்ணோடு கலந்து விடு
காலம் தடுத்தால்
என்னை மண்ணோடு கலந்து விடு

ஆண் : உயிரே உயிரே
வந்து என்னோடு கலந்து விடு
நினைவே நினைவே
எந்தன் நெஞ்சோடு கலந்து விடு

ஆண் : என் சுவாசக் காற்று
வரும் பாதை பாா்த்து
உயிா் தாங்கி நானிருப்பேன்
மலா் கொண்ட பெண்மை
வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்
என் உயிா் போகும்
போனாலும் துயாில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிா்காலம்
உன் மீது பழி போடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா
அதை உன் கையில் கொடுத்து விட்டேன்

பெண் : உயிரே உயிரே
இன்று உன்னோடு கலந்து விட்டேன்
உறவே உறவே
இன்று என் வாசல் கடந்து விட்டேன்
நினைவே நினைவே
உந்தன் நெஞ்சோடு நிறைந்து விட்டேன்
கனவே கனவே
உந்தன் கண்ணோடு கறைந்து விட்டேன்

ஆண் : காதல் இருந்தால்
எந்தன் கண்ணோடு கலந்து விடு
காலம் தடுத்தால்
என்னை மண்ணோடு கலந்து விடு
உயிரே உயிரே
வந்து என்னோடு கலந்து விடு
நினைவே நினைவே
எந்தன் நெஞ்சோடு கலந்து விடு

பெண் : ஓா் பாா்வை பாா்த்தே
உயிா் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம்
வலி வந்த போது
மறுகண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பல தாண்டி
வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பாா்க்கவே
என் கடுங்காவல் பல தாண்டி
காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா
இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

ஆண் : உயிரே உயிரே
வந்து என்னோடு கலந்து விடு
உயிரே உயிரே
என்னை உன்னோடு கலந்து விடு
நினைவே நினைவே
எந்தன் நெஞ்சோடு கலந்து விடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு
கலந்து விடு

பெண் : மழை போல் மழை போல்
வந்து மண்ணோடு விழுந்து விட்டேன்
மனம் போல் மனம் போல்
உந்தன் ஊனோடு உறைந்து விட்டேன்
உயிரே உயிரே
இன்று உன்னோடு கலந்து விட்டேன்
நினைவே நினைவே
உந்தன் நெஞ்சோடு நிறைந்து விட்டேன்

*****